அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

தமிழா ...


தமிழன் என்ற அடை மொழியை அகற்ற
நாம் என்ன இறைவனிடம்
வரமா கேட்க முடியும்

அதர்மத்தை அகற்ற
அஸ்திரம்தான் வழியென நாம்
கீதையில் கற்றதுண்டு

நாம் வாழும் நரகத்தில் நமது இடம்
அகதியின் உறைவிடம்
அதை அஸ்தமனம் ஆக்க
ஆண்டவா எம்மை ஆழவிடு என
கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது

கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம்
எம் நிலத்தை களவாடி இட்ட
அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும்

மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும்
தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும்

விதியே கதியே என எண்ணி
உன் கதியை அவர் கையில் இட்டால்
சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார்
சந்ததி வாழ ஒரு துண்டு
நிலத்தையும் தரமாட்டார்

சங்கத்தால் வழர்த்த மொழி பேச
சங்கடம் வரும் என்று மறக்கிறாய்
சொந்த முகவரி மறைக்க
முகவரி தேடி அலைகிறாய்
போதும் தமிழா போதும்
நீ பட்ட துன்பம்
போதும் தமிழா


svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini