அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

தமிழன் மறக்கமுடியா திருநாள்...!


பங்குனி 26 உலகத்தமிழன் மறக்காத நாள்
மறந்திட முடியாத் திருநாள்...!
புதிய படையொன்று தனியனாய்.
வான் தொட்ட முதல் நாள்....!
இராவண அரசன் பின்னர் முகில் தொட்ட
முதல் தமிழ் தனிப்படை....!
இயலாமை என்றெங்கள் எமது செயல்
வல்லமையில் இல்லை எனக்காட்டி விட்டார்..!

தனித்தமிழராய் வான் தொட்டு
சாதனை நிகழ்த்தி நின்றார்..!
ஈழத்தின் தலைவரின் மனதில் உதித்த
சரித்திர நாயகன் சஙகரால் உருப்பெற்று
உலகம் பேசிய வான் படை எம் படை.!.
பிறரிடம் கையேந்தி கால் தொட்டு வால்பிடித்து
பெற்றிடாத தனித்தமிழர் வான்படை..

தரை தொட்டோம் தவித்தாய்..!
கடல் தொட்டோம் கவிழ்ந்தாய் ...!.
வான் தொட்டோம் வாய் பிளந்தாய்.!

கன்னிப் பறப்பது கண்டது கட்டுநாயக்கா
கடைசிப்பறப்பது கண்டது களனிதிஸ்ஸ..
கலங்கி அதிர்ந்தாய் கண்காணிப் பெல்லாம்
கட்டிலின் கீழ் பதுங்கி விழி பிதுங்கி
விழித்தாய் விடிய விடிய...!
வந்த வழி தொரியாது போன வழித்தடமும் கிடையாது
உன்வாயில் வீரம் மட்டும் குறையாது வண்டு கொண்டு
தேடினாலும் தமிழன் வான்படை தொரியாது..
தொட்டது நீ ஓடு பாதையைதான்.. .!
நீ எம்மைதேடினாலும் நாடு நாடாய்
ஓடினாலும் அடங்கார் புலிகள் .!
நீ வாடி வதங்கி ஓயும் வரை ஓயார் தமிழர்..!

தரைப்படை கடல்படை குதிரைப்படை
யானைப்படை காண்பித்ததான் பண்டை தமிழர்
தனி வான்படையை காண்பித்தார் நம் தலைவர் ..!
கடலாலும் வரும் நிலத்ததாலும் வரும் வானாலும் வரும்
தமிழருக்காய் நியாயம் கேட்கும் தமிழர் படை
இது நிச்சயம் நடக்கும்...
காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்..
அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து கொள்.
svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini