அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

ஈழமண்...

ஈழ ஈழ மண் எங்களின் சொந்த மண்
அதை தன் சொந்தமென்று
யார் சொன்னவன்

நம் மண்ணின் உள்ளே வந்து பார்
வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்

எம் முன்னே காசுக்காய் காட்டியே
கொடுத்தாலும் கடத்தித்தான்
நடு காட்டில் விட்டாலும்
எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும்
எம் மண்ணின் விடுதலை காண்போம்

கோடியாய் கொட்டி நீ கொடுத்தாலும்
குண்டை மழையாக பொழிந்தாலும்
நம்மை பெற்ற அன்னை மண்னை
நாம் மறந்து போகமாட்டோம்

அமைதியாய் பதுங்குது புலி
அது பாய்ந்திடும் போது தெரியும்
உனக்கு அதன் வீரம்
svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini